இலவு காத்த கிளியாய்..
எண்ணக் குதிரைகள்
ஓட்டமெடுக்கின்றன
அதை வண்ணமாய் தீட்டி வடிக்க
வேண்டுமெனக்கு புத்தகம்
எனக்கே எனக்கென்று
படைக்கப்பட்ட புத்தகம்
புரட்டப்படாத பக்கங்கள் ஏராளம்..
வாசிக்க மனசும் தாராளம்
ஆனால்… Continue reading
எண்ணக் குதிரைகள்
ஓட்டமெடுக்கின்றன
அதை வண்ணமாய் தீட்டி வடிக்க
வேண்டுமெனக்கு புத்தகம்
எனக்கே எனக்கென்று
படைக்கப்பட்ட புத்தகம்
புரட்டப்படாத பக்கங்கள் ஏராளம்..
வாசிக்க மனசும் தாராளம்
ஆனால்… Continue reading
எங்கே திரும்பினும்
உன் அக பிம்பங்கள்
ஆயிரமாயிரம் கேள்விகளுடன்
துரத்துகின்றன எனை!
தவிர்க்க நினைக்கவில்லை.
தள்ளி நிற்க நினைத்தாலும்
தள்ளாட வைக்கிறாய்!
துள்ளி விளையாடிய மானை
துவண்டு போகச் செய்த
மாய மனது
திரை விலகியபின்
மிரட்சியாய் பார்க்கிறது! Continue reading
இறுகிய இதயத்தினனாய் இருந்தேன்
இளவஞ்சியவள் இளக்கலில்
இணங்கித்தான் இளகினேன்
குழைந்துதான் குழம்பினேன்
நாட்கள் பூக்களாய் மலர்ந்தன
வாரங்கள் வருடிச் சென்றன Continue reading
என் பெயர் சித்தார்த் கௌதம்
சித்தார்த்தனும் நானே…
கௌதமனும் நானே…
நான் அவனாகவும் இருக்கிறேன்…!
நான் இவனாகவும் இருக்கிறேன்…! Continue reading
ஆயிரம் காதல் கணைகள் வீசினாள்
என் இதயமே மைய இலக்கு
இலக்கு மாறவில்லை
இரும்புப் பேழையாய் இருந்த
இதயத்தை துளைத்துத் தள்ளினாள்
காதலெனும் தேனாறு சுரந்ததும்
ஜீவ நதியாய்ப் பெருக்கெடுத்ததும்
கண்ணீரெனும் கடலினுள் கலந்து உருகத்தானோ!! Continue reading
என்னுயிர் அம்முக்குட்டி..
உன் உயிரைப் பறித்து
என்னுடன் சேர்த்துக் கொண்டதாலேயே
என்னுயிர் என்கிறேனடா..
என் உணர்வைப் பறித்து
உன்னுடன் சேர்த்துக் கொண்டதாலேயே
உணர்வற்றுப் போனேனடா… Continue reading
தங்கமானவளே!
உன் கை விரல்கள் தீண்டிய
இணையற்ற பொக்கிஷம்
என்னை வந்தடைந்தம்மா..!
சேரவேண்டிய இடமறிந்து
சேரவேண்டிய கரமறிந்து
பத்திரமாய் பாந்தமாய்
வந்து சேர்ந்ததம்மா…! Continue reading
ஊழிப் பெருங்காற்றாய் மனம்..
ஆனால் சலனமற்றதாய் முகம்!
என்னால் மட்டும்
எப்படி முடிகிறது!!
பொங்கி வரும்
கண்ணீர் அலைகள்
சில துளிகளை மட்டும்
சிதறி விட்டுச் செல்கின்றன
மீண்டும் உள்ளுக்குள்ளே! Continue reading
நாட்கள் நகர்கின்றன
வாரங்களும் ஓடுகின்றன
மாதங்களும் வழிந்தோடுகின்றன!
நினைவுப் புதையலில் மட்டும்
அள்ள அள்ளக் குறையாமல் நீ!
நகரவும் இல்லை, வழிந்தோடவுமில்லை Continue reading
நீ போட்ட நேச விதைகளே
என்னுள் செழிப்பாய் வளர்ந்து நின்றன..
மாசு மருவிலா அன்புதனை
அள்ளிக் கொடுத்தவள்
சிறிது விடம் தன்னையும்
கிள்ளிக் கொடுத்திருக்கலாமே! Continue reading