ஆன்மாக்களின் முற்றுப் பெறா தேடல்
அழகிய பௌர்ணமி இரவில்
மெல்லிய மழைச் சாரலில்
வருடலாய் தவழும் குளிர்காற்றில்
உன்னுடன்
உன் நினைவுகளுடன்
சுகித்திருப்பேன்…….
மலைதேசத்தில்
மனம் மயங்கிக் கிடப்பேன்…
சில்வண்டுகளின் கீச்சிடும் ஒலிகள்
பன்னீர் புஷ்பங்களின் சுகந்த வாசனை
இலைகளினூடே கீறிப் புகும் நிலவின் ஒளி
சலசலத்து ஓடும் சிற்றருவி நீர்
இயற்கையின் ரம்மியத்தில்
இதயங்களின் சங்கமிப்பில்
ஆன்மாக்களின் முற்றுப் பெறா
தேடல் நிகழ்கிறது….
காதலின் கனப்பு
கடுங்குளிரையும் கரைக்கும்
காதலின் வனப்பு
சுந்தர வனத்தையும் சுண்டிப் போடும்
காதலின் நிறைப்பு
மன்மத தேசத்தில் மன்றாட வைக்கும்
உன்னோடு மீண்டும்
ஓர் அற்புத இரவு……….
என்னைத் தேடி
உன்னில்
என்னைத் தேடி
அலையும் களைப்புறா பயணம் அது..!
No trackbacks yet.