மகிழம்பூவாய் ஒரு காதல்…
வாசமுல்லையாய்
என் சுவாசம் எல்லையாய்க்
கொண்டவளுக்கு
கண்டெடுத்து முத்தொடுக்கிறேன்!
மகிழம்பூவாய்
மனமகிழ்ந்து வாழ
மனமுகிழ்த்து முத்தொடுக்கிறேன்!
பிறர்
எட்டினாலும் கிட்டாதவள்
என்னிடம் மட்டும்
ஒட்டி நிற்பாள் உறவு சொல்லி!
தொட்டவுடன்
சட்டென சிலிர்ப்பாள்
சடசடவென சரியும் உள்ளுக்குள்
சங்கீதக் கீர்த்தனைகளின் ஆலாபனைகள்!
பனித்துளியினூடாக
பரவிப் பெருகிப் பட்டுப்போல
பளிரீடும் பகலவனின் கதிர் போல..
ஆடவன் என் சொல்
கேட்டு சொக்கிப் போய்
சொர்ணமாய் சொலிக்கும் என்
சொந்தம் அவள்!
ஒட்டிச் செல்லும் காற்றின் சந்தமாய்…
தொட்டுச் செல்லும் நெருப்பின் வேட்கையாய்…
பற்றிப் படரும் நீரின் குளுமையாய்….
பாதந்தாங்கும் மண்ணின் மணமாய்…
பாரெங்கிலும் பரவி நிற்கும் ஆகாயக் குடையாய்…
ஒளிர்பவளின் காதோரம்
மென்மையாய் உதிர்க்கிறேன்..
“பிறந்தநாள் வாழ்த்துகள்..”
மென்மையாய் உதிர்கிறேன்..
“வாழ்த்து மலர்களாய்..”